கம்பொல பல்லேவெல பகுதியில் தீ விபத்து

கம்பொல பல்லேவெல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள மூங்கில் புதர்களில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் தீ, குடியிருப்புகளுக்கு மிக அருகில் ஏற்பட்டுள்ளதால், வீடுகளுக்குச் சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கம்பொல நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நீர் தாங்கி வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow & Share




