வெனிசுவெலா எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கபட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் படி, வெனிசுவேலா கடலோர பகுதியில் இன்னொரு எண்ணெய் கப்பல் அமெரிக்க கடலோரக் காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் அரசு, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை “போதைப் பொருள் பயங்கரவாதி” என அறிவித்து, அமெரிக்காவுக்கான போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இது வெனிசுவேலாவில் அமெரிக்க படையால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய் கப்பல் ஆகும்.
Follow & Share




