அவுஸ்திரேலியாவில் இலவசப் போக்குவரத்து திட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்கள் பொதுப் போக்குவரத்தை தற்காலிகமாக இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ளன.
மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:
விக்டோரியா மாநிலத்தில் மார்ச் மாத இறுதி வரை பேருந்து, தொடரூந்து மற்றும் டிராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்திலும் கட்டணம் அறவிடப்படமாட்டாது.
அதேபோல் டாஸ்மேனியா மாநிலத்தில் (Tasmania) மார்ச் 30ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதி வரை பேருந்து மற்றும் படகு சேவைகள் இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Follow & Share




