8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் நேருக்கு நேர் இந்தியா – ஆப்கானிஸ்தான்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, இன்று ஆரம்பமாகவுள்ளது.
நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முற்பகல் 9:30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.
இரண்டு அணிகளும் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இதில் முதல் போட்டி எதிர்வரும் 13ம் திகதி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி லக்னோவிலும் மூன்றாவது போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையிலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




