இந்தியா – பாகிஸ்தான் போட்டி உறுதி : பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருபதுக்கு – 20 (T20) உலகக்கிண்ணப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியானதை அடுத்து, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மற்றும் ஏனைய தரப்பினர் இப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Follow & Share




