அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள முக்கிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அரை உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ (Tasnim) வெளியிட்ட அறிக்கையின்படி, IRGC இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரானில் உள்ள ஈரான் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வடகிழக்கு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
எனினும், இத்தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow & Share




