அமெரிக்க 18 நிறுவனங்கள் மீது இலக்கு வைக்கும் ஈரான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய எல்லைக்குள் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈரானிய மண்ணில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் கைமாறாக, அந்தந்த நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் சிதைக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
Follow & Share




