கண்டி – மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மண்சரிவு அபாயம்

கண்டி – பேராதனை மற்றும் கன்னொருவை ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் அதே வேளையில், ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள பல கட்டிடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow & Share




