கனமழை அபாயம் : கொத்மலை–கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை –கம்பளை (B431) பிரதான வீதி இன்று முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பரகம்மன பகுதியில் மீண்டும் வீதியில் வெடிப்புகள் தோன்றி, புதிய மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்ததை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Follow & Share




