சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தடைப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ( 27) ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய ரீதியில் விலை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் 1% உயர்ந்து, ஒரு பீப்பாய் 106.50 டொலராக விற்பனையானது. அதேவேளை, அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் (WTI) 1% உயர்ந்து 95.40 டொலராகப் பதிவாகியுள்ளது.
ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பாகிஸ்தானுக்குத் தூதுக்குழுவை அனுப்பும் திட்டத்தை வொஷிங்டன் இரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Follow & Share




