நாடளாவிய 21 நகரங்களில் மே தின உற்சாகம் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை(01) மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 21 முக்கிய நகரங்களில் 21 மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நுவரெலியாவில் நாளை காலை நடைபெறும் மே தினக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் மஹரகமையில் நடைபெறும் பிரதான மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
Follow & Share




