நாமல் ராஜபக்ஷவுடன் தம்மரதன தேரர் சந்திப்பு

நாமல் ராஜபக்ஷவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்கவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவ ஹங்குனு வேவே தம்மரதன தேரரைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மிஹிந்தலை தேரர் மிகுந்த உணர்ச்சியுடன் நாமல் ராஜபக்ஷவிடம் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த சிறிய குற்றங்களைச் செய்யும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்திற்குச் செல்வதாகவும், இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான பணிகளைத் தொடங்குவதாகவும், தேரர் அதற்கு தலைமை தாங்குவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

Follow & Share




