2086 கடற்படையினருக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது 2086 கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொடகேவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 17 அதிகாரிகள் அடுத்த பதவி கட்டத்திற்கும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மட்டத்திலுள்ள 2069 கடற்படையினர் பதவியின் அடுத்த கட்டத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




