இந்திய ரயில்வே சேவையில் புதிய புரட்சி

இந்தியாவின் பொது பயணிகள் சேவையில் மற்றுமொரு புரட்சியாக புதுடில்லி மற்றும் உத்தர பிரதேஷின் மிருட் நகரங்களை இணைக்கும் புதிய ‘நமோ பாரத்’ கடுகதி நகர்சேர் ரயில் சேவை பிரதமர் நரேந்தர மோதி தலைமையில் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
82.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கத்தில் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த ரயில் பயணிக்கும்.
இதற்கமைய பயண நேரம் 55 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறுகிய தூர மீருட் மெட்ரோ ரயில் சேவையை விஸ்தரிக்கும் நடவடிக்கையும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
Follow & Share




