பன்னிபிட்டியவில் பஸ் மற்றும் லொறி மோதியதில் விபத்து – ஒருவர் பலி

பன்னிபிட்டிய பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




