இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தோனேசியாவின் டெர்னேட் கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா கடற் பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Follow & Share




