LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

பிரதமருக்கு எதிரான மகஜரில் நாங்கள் கையொப்பமிடவில்லை! சிறீதரன் எம்.பி

January 12, 2026 · Claude

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட, பிரதமர் மீதான அல்லது பிரதமருக்கு எதிரான அந்த மகஜரிலே இலங்கை தமிழரசு கட்சியினர் ஆகிய நாங்களும், இன்னும் சிலரும் அதில் நாங்கள் கையொப்பம் இடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையனுடைய புதிய, கல்வி செய்திகள் தொடர்பில், இலங்கையின் கல்வி அமைச்சரும், இந்த நாட்டினுடைய பிரதம அமைச்சருமான, ஹரிணி அமரசூரிய அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், அல்லது அவர் மீதான அவதூறுகள் பரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன

குறிப்பாக, இலங்கையினுடைய பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஒரு தொகுதியினரால், அவருக்கு எதிரான கையொப்பங்கள் பெறப்பட்டு, அவரை பிரதமர் பதவியில் இருந்தும்,கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என்ற அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான ஒரு மனுவையும் அவர்கள் சபாநாயகரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட, பிரதமர் மீதான அல்லது பிரதமருக்கு எதிரான அந்த மகஜரிலே இலங்கை தமிழரசு கட்சியினர் ஆகிய நாங்களும், இன்னும் சிலரும் அதில் நாங்கள் கையொப்பம் இடவில்லை.

காரணம் ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதம முதலமைச்சர், பிரதம அமைச்சராக இருக்கின்ற ஒரு காரணம்,அதனைவிட அவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றம் என்பதற்கான, சரியான ஆதாரங்களை இதுவரை யாரும் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Explore More ›