ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது, அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




