2.5 மில்லியன் டொலர் விவகார அவசர விசாரணை கோரிக்கை!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர், முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்த நிதி மோசடி குறித்து, அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால், அவுஸ்திரேலியாவின் தரப்பினருக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திருடப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow & Share




