நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிற்பகல் 1.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




