5% மின்சார நுகர்வோருக்கு அதிர்ச்சி: கட்டணம் 18% உயர்வு அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்ததாவது, இந்த காலாண்டு மற்றும் அடுத்த காலாண்டில் சுமார் ரூ.38 பில்லியன் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையால், மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் ரூ.15 பில்லியன் நிவாரண நிதியை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண திருத்தம் அனைத்து நுகர்வோரையும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த மின் நுகர்வோரில் சுமார் 5 சதவீதமானவர்களுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தும் எனவும், மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்கு எந்தவித தாக்கமும் இருக்காது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Follow & Share




