இன்று முதலாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து மோதல்!

T- 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று (04) தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் (Eden Gardens) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இரவு நேரப் போட்டியாக நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்களும் தமது இறுதிப் பயிற்சி அமர்வுகளில் நேற்று (03) இரவு ஈடுபட்டனர்.
தொடர் முழுவதும் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி தோல்வியடையாமல் (Unbeaten) திகழ்வது, ஏனைய அனைத்து எதிரணிகளுக்கும் பலத்த சவாலாக அமையும் என விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Follow & Share




