கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்குமுறை அமுலுக்கு!

கொழும்பு நகரில் நாளை (28) நடைபெறவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்’ (Walk for Peace) நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.
நாளை காலை 11.00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு பின்வரும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
Follow & Share




