ஹொரணை வவுலகல ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து.

இன்று (29) காலை ஹொரணை வவுலகல பகுதியில் அமைந்துள்ள றப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதைத் தொடர்ந்து, ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், அப்பகுதி மக்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை தீ விபத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow & Share




