மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நேற்று செவ்வாய்க்கிழமை (23) பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதுடைய பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச் சேர்ந்தவறே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
Follow & Share




