எதிர் கட்சி தலைவரின் நத்தார் வாழ்த்து செய்தி

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அனர்த்த காலங்களில் நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமையே நாட்டின் வலிமை என தெரிவித்த அவர், இருண்ட இரவுகளிலும் ஒளி பிறக்கிறது அது நம்பிக்கையின் ஒளி அழிவுகரமான புயலுக்குப் பின் ஒரு நாடாக நாம் விழுந்த இடத்திலிருந்து மீண்டும் வலுவுடன் எழுந்து முன்னேற வேண்டும். அதற்காக இந்தப் புனித நத்தார் தினத்திலிருந்து இன, மத, வர்க்க, நிற, கட்சி பேதமின்றி இலங்கையராக முன்னிலைப்படுத்தி முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார்.
Follow & Share




