மலையக மக்களின் குரலாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது , மலையக மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினைகள் மற்றும் வீட்டு வசதி குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு,மலையகப் பாடசாலைகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மலையகப் பாடசாலைகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். குறிப்பாக கல்வி மற்றும் காணி விவகாரங்களில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.




