இன்று வெளியாகும் மின்கட்டண திருத்தத்தின் இறுதி தீர்ப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி இந்த ஆண்டிற்கான முதலாவது மின்கட்டணத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் மின்சார உற்பத்திச் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கட்டண மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின் மூலம் மின்கட்டணத்தில் அதிகரிப்பா அல்லது மாற்றமில்லையா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்க உள்ளது.
இந்த அறிவிப்பு வீட்டு மின்பயனாளர்கள் மட்டுமன்றி தொழில் மற்றும் வணிகத் துறைகளுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow & Share




