LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

ஆயுதம் மூலம் ஆட்சியை பிடிக்கலாம் என்பதே ஜே. வி. பியின் நிலைப்பாடு!

January 24, 2026 · Claude

வன்முறை ஊடாக ஆயுதங்களை ஏந்தி அரச பலத்தைப் பெற முடியும் என்பதே தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நிலைப்பாடாகவுள்ளது – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், மகா சங்கத்தினராகவே இருந்தாலும் அவர்கள் தம்மை தாக்கினால் தாமும் பதில் தாக்குதல் நடத்துவோம்

என அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதுவே ஜே.வி.பி.யின் உண்மையான முகமாகும். இது இலங்கை – இந்த நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பிரதாயங்கள் உள்ளன என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

இவ்வாறானவர்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதா அல்லது ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

வன்முறையின் ஊடாக ஆயுதங்களை ஏந்தி அரச பலத்தைப் பெறமுடியும் என்பதே தற்போது ஜே. வி. பி.யின் நிலைப்பாடாகவுள்ளது. அவ்வாறு இவர்களால் அரச அதிகாரம் கைப்பற்றப்படும்பட்சத்தில் இந்நாட்டில்

மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் நடத்தப்படமாட்டாது.

நாட்டிலுள்ள சகல ஜனநாயக சக்திகளும் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

அரசியல் பேதங்களை துறந்து ஐக்கியத்துடன் ஒன்றிணைய வேண்டும் – என்றார்.

Related Stories

Explore More ›