இந்த ஆண்டின் வெசாக் நாள் நிர்ணயம் : பௌத்த விவகார திணைக்களம் அறிவிப்பு!

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




