மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

வெல்லவாய – தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவின் கித்துல்கோட பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து பஸ்,வேன் மற்றும் மோட்டார் வாகனம் ஆகியன மோதுண்டதிலேயே இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. ஆனால் வாகனங்கள் பலத்த சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Follow & Share




