பதுளை மண்சரிவுகள் : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நிலவும் சீரற்ற வானிலையால் பதுளை மாவட்டத்தின் 6 இடங்களில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தங்களினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 07 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அது குறித்தான அவதானம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Follow & Share




