காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!

காஸாவின் தென் பகுதியிலுள்ள கான் யுனிஸ் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னரும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்தத்தின் பின்னர் நேற்றையதினம் வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 30 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு கரையிலுள்ள நெப்லுஸ் நகரில் இஸ்ரேல் படையினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow & Share




