அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்!

மோசமான காலநிலை காரணமாக இன்று (நவம்பர் 28) காலை 6.00 மணிக்குப் பின்னர் அனைத்துப் பிரதான ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவைகளை முற்றாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தரும் ஊழியர்களுக்காக மிகக் குறைந்த அளவிலான ரயில் சேவைகள் மாத்திரம் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow & Share




