மாகாண சபைத் தேர்தல்கள் அரசாங்க தரப்பு கருத்து

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.
சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது அவர், “மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்
Follow & Share




