LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் மோதல் மசகு எண்ணெய் விலை கடும் உயர்வு!

May 8, 2026 · Claude

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.64 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 102.7 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 3 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவத் தளங்கள் மீது “தற்காப்புத்” தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.64 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 102.7 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 3 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவத் தளங்கள் மீது “தற்காப்புத்” தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. 

அதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு உட்பட வளைகுடா கடலோரப் பகுதிகளில் பல வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும், பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) அருகே ஈரானிய ஆயுதப் படைகள் எதிரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

இதற்கிடையில், போர் நிறுத்தம் இன்னும் அமுலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›