நாட்டின் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மத்திய, சபரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




