ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை ஆறான குடா ஓயாவுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று ( 17) விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, குறித்த நீர்நிலையைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Follow & Share




