போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய 22 தேரர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் தரையிறங்கிய வானூர்தியில் குறித்த 22 தேரர்களும் வருகை தந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமிருந்தும் தலா 05 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.
அதற்கமைய, குறித்த தேரர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.தேரர்களிடமிருந்து இதுவரை 110 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Follow & Share




