44 காட்டு யானைகள் உயிரிழப்பு

இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, ரயில் விபத்துக்கள், நீரில் மூழ்கியமை, விஷம் கொடுக்கப்பட்டமை, அங்கீகரிக்கப்படாத மின்கம்பிகளில் சிக்கியமை போன்ற காரணங்களால் யானைகளின் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
இதேவேளை அண்மைக் காலங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது
Follow & Share




