வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையாக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடியதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




