நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த மற்றொரு கைதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இரண்டு உயிரிழப்புகளுக்கான காரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow & Share




