விமல் வீரவன்சவின் மேல்முறையீடு தள்ளுபடி!

அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை மீறியதற்காக, ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்ட கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
முந்தைய தீர்ப்புக்கு எதிராக வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்தது.
வீரவன்ச, ஜேவிபியின் அரசியல் சித்தாந்தத்தையும் கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணங்களையும் உள்ளடக்கிய தனது “பொய்களுக்குப் பதிலாக உண்மை” என்ற நூலை அனுமதியின்றி வெளியிட்டதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி, தில்வின் சில்வா இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.
புத்தகத்தை அதன் தற்போதைய வடிவத்தில் வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் தடை விதிக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட சர்ச்சைக்குரிய 60 பக்கப் பகுதி நீக்கப்பட்டால், புத்தகத்தை மீண்டும் வெளியிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அறிவுசார் சொத்துரிமை மீறல் தொடர்பாக வீரவன்சா மேலும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது




