விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய சந்தேக நபர் பிடிபட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தொம்பே, பரன்கொட பகுதியில் நேற்று (13) காலை மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




