LATEST
பிற்பகல் முதல் மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. இன்று கடும் வெப்பம்… வானிலை மையம் அவசர எச்சரிக்கை! கொசு ஒழிப்பில் அலட்சியம் வேண்டாம்… டெங்கு வேகமாக பரவுகிறது! அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயில் சிறிய மாற்றம்! அமெரிக்க தாக்குதல் தொடர்கிறது… எண்ணெய் விலை வேக உயர்வு! கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி டெல்லியில் மாணவர்கள் பேரணி! நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது! இலங்கையில் தொடரும் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை! பிற்பகல் முதல் மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. இன்று கடும் வெப்பம்… வானிலை மையம் அவசர எச்சரிக்கை! கொசு ஒழிப்பில் அலட்சியம் வேண்டாம்… டெங்கு வேகமாக பரவுகிறது! அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயில் சிறிய மாற்றம்! அமெரிக்க தாக்குதல் தொடர்கிறது… எண்ணெய் விலை வேக உயர்வு! கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி டெல்லியில் மாணவர்கள் பேரணி! நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது! இலங்கையில் தொடரும் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
உள்ளூர்

ஜூலை 18 நாட்களில் மட்டும் 19,943 டெங்கு தொற்றாளர்கள்!

July 19, 2026 · National Tamil LK

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 11,610 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

Explore More ›