SIM பதிவு செயன்முறையில் மாற்றம்

உள்நாட்டு சிம் அட்டை பதிவு செயன்முறைகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் 2019-08-02க்கு முன்னர் பெற்றுக்கொண்ட சிம் அட்டைகளுக்கான தகவல்களை மீள பதிவு செய்வதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.
குறித்த திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிட் அட்டைகளுக்கான குறிப்பிட்ட தகவல்கள் உரிய தொலைபேசி செயற்பாட்டு நிறுவனங்களிடம் இல்லையெனவும் இதனால் சட்ட ரீதியான விசாரணைகளுக்கு சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 16 – 17 வயதிற்கிடைப்பட்டவர்களை பதிவு செய்வதற்கும் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை விநியோகிப்பது குறித்தான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கி தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறைகளை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




