இந்தியாவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி

இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் (AI Impact Summit 2026) பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (பெப்ரவரி 17) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார் என்பதை விமான நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதியும் இலங்கைத் தூதுக்குழுவினரும் இன்று பிற்பகல் 02:05 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 விமானம் மூலம் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.


Follow & Share




