ஜா-எல் துப்பாக்கிச் சூடு சம்பவம்

இன்று அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டியவில் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பட்டுவத்தே சாமர என்ற மனோஜ் சுரங்க லியனகே என்பவரின் மனைவியான சதுரிகா வீரசூரிய வசித்து வந்த வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Follow & Share




