இலங்கை – ஜப்பான் இருதரப்பு சந்திப்பு

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் Shinjirō Koizumi இடையே டோக்கியோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது. இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
Follow & Share




