நாளை முதல் காலநிலையில் மாற்றம்

நாட்டில் நிலவி வரும் கடும் வறண்ட வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
Follow & Share




